×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பசி, குழந்தை திருமணம், விபச்சாரம் - இந்தியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி பெண்களை காயப்படுத்துகிறது, மேலும் பாதிப்பு கீழ் ஜாதி தலித்துகளுக்கு

by ரினா சந்திரன் | @rinachandran | Thomson Reuters Foundation
Monday, 23 May 2016 13:32 GMT

Shivarti, a second wife, holds her grandson while carrying metal pitchers filled with water from a well outside Denganmal village, Maharashtra, India, April 21, 2015. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

மும்பை, மே 23 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவில் ஒரு தசகாப்தத்தில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள வறட்சியினால் துன்பப்படும் பெண்களும் கீழ் ஜாதி தலித்துகளும் அளவிற்கு மீறி பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் ஊட்டச்சத்துக்குறைவு முதல் குழந்தைத் திருமணம், விபச்சாரம் வரை தாக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் 29 மாநிலங்களில் 13 மாநிலங்களில் முழுமையாகவும் மக்கள் தொகையில் கிட்டதட்ட கால்பங்குகாக அதாவது முன்னூற்றி முப்பது மில்லியன் பேர்களுக்கு மேலாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு மதிப்பிட்டுள்ளது.

’’வறட்சி காலங்களில் பெண்களுக்கு தான் மிகவும் பாதிப்பு காரணம் அவர்கள் தான் தண்ணீர் எடுக்க மற்றும் குடும்பத்தினருக்கு உணவு அளிக்க என்கிற கடமையோடு உள்ளனர்’’ என்கிறார் வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராட்ஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் பெண்கள் உரிமை ஆர்வலருமான வர்ஷா தேஷ்பாண்டே.

‘’ அவள் தான் முதலில்  தூங்கி எழுந்திருக்கிறார். அவள் தான்  வெகு தூரத்திற்கு நடந்து போய் தண்ணீரை எடுத்து வருகிறார். அவள் தான் கடைசியாக சாப்பிடுவார்  அநோகமாக குறைவாக கிடைக்கும் இறுதியாக கடைசியாக தான் தூங்குவாள். இவைகள் எல்லாம் அவளது உடலை பாதித்து, அவளுடைய மாதவிடாய் சுழற்சியிலும் இனப்பெருக்க சுழற்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது ‘’ என்று அவர்  தான்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையிடம் கூறினார்.

பயிர்கள் பட்டுப்போக கால்நடைகள் அழிய , பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு, தண்ணீர், வேலைவாய்ப்புகளைத் தேடி புலம்பெயர, பெண்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் எல்லாம் ஆட்கடத்தல்காரர்களின் பாதிப்பில் உள்ளனர்.

சிறுமிகளை பள்ளிக்கு போக விடுவதில்லை தண்ணீர் எடுத்து வர அல்லது தாயார் வெளியே போய் தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும்போது வீட்டில் உள்ள குழந்தைகள் கவனிக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

 வேலை தேடிப் போகும் ஆண்கள் தங்கள் குடும்பங்களை கைவிட்டுள்ளனர். சில ஆண்கள் பல திருமணங்களையும் செய்கின்றனர் ஒருவேளை தண்ணீர் எடுத்து வருவதற்காகக் கூட இருக்கும்.

இந்தியாவில் பலதார திருமணம் சட்ட விரோதமானது. இந்த ’’தண்ணீர் மனைவிகள்’’  அல்லது உள்ளூர் மொழியில் சொல்லப்படும் ’’ பானிவாலி பாய் ‘’ க்கு அர்ப்பமான உரிமைகள்.

’’இந்த வறட்சிக்காலக் கட்டங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கிறது - பெண்கள் விபச்சாரிகளாக வேண்டிய கட்டாயம், ஆண்கள் குறைந்த விவசாய வருமானத்தை ஈடுகட்ட மேலும் வரதட்சனை கோருவது மற்றும் வரதட்சனை சாவுகள் அதிகரிப்பு பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலை என்றால் அதற்கு ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை ’’ என்கிறார் தேஷ்பாண்டே.

’’ குழந்தை திருமணங்கள் அதிகரித்திருப்பதையும் நாங்கள் பார்க்கின்றோம், இது பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முயற்சிப்பதாகும். அத்தோடு கூடுதல் பணத்தேவையையொட்டி குழந்தை தொழிலாளர்களும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.’’ என்றார் அவர்.

விளிம்பு இடைவெளிகள்

வறட்சியை தேசிய நெருக்கடியாக அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்ட நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, நூற்றி அறுபது மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் வாழ்வு ஆபத்தில் இருக்கின்றன என்று கூறுகிறார்.

வறட்சி குறித்து பதில் தெரிவிக்க தாமதம் செய்ய சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அதிகாரவட்டாரத்தை கடுமையாக விமர்சனம் செய்து சில மாநிலங்கள் வறட்சி பேரிடர் விவகாரத்தில்’’ நெருப்புக்கோழி மனப்பான்மையுடனா’’ அணுகுமுறையில் இருக்கிறது என்றது.

வங்கிகள் சிறுவிவசாயிகளுக்கு விரைவாக கடன் வழங்கிடவும், நிவாரண நடவடிக்கைகளில் முடுக்கப்பட்டு யாரையும் விட்டுவிடாமல் அனைவருக்கும் கிடைக்கச்செய்திடவும் மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.      

எனினும் நாட்டிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நிலமற்ற கீழ் சாதி தலித்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் சென்றடையவில்லை.

பேரழிவுகளில் தலித் மேலும் பாதிக்கப்படலாம் காரணம் சமூக நிலைப்பாட்டில் விளிம்பு நிலையில் இருப்பதால் பாகுபாடு காணப்படுகிறது. அவர்கள் வாழும் குடியேற்றங்கள் பிரதான சமூகத்திடமிருந்து பிரிக்கப்பட முனைகின்றன  என்றும் தேசிய தலித் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

’’பெரும்பாலும் தலித் கள் குத்தகை விவசாயிகளாக இருக்க இவர்கள் பெயர் நில உரிமையாளர்கள் பதிவேட்டில் இடம் பெறுவதில்லை. இதனால் இவர்களுக்கு அரசின் நிவாரணமும் கிடைப்பதில்லை’’ என்று கூறினார் தேசிய தலித் கண்காணிப்பு அமைப்பின் ராஜேஷ் சிங்.

தாழ்ந்த ஜாதி கிராமத்தவர்களுக்கு எதிரான பாகுபாடு 2004 சுனாமி பேரழிவுக்கு பின்னரும் மற்றும் டிசம்பரில் சென்னை வெள்ளம் ஏற்பட்ட சமயங்களிலும் இருப்பதை  லாபி குழு கண்காணித்தது.

’’அவர்கள் இயல்புநிலை மற்றும் நிர்வாக முறை மூலம் புறக்கணிக்கப்பட்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பில் அவர்கள் சேர்க்கப்படுவதில்லை. அரசு வேலை மற்றும் மானியங்களுடன் கூடிய ரேஷன் பொருட்கள் ஆகியவைகளும் மேல் ஜாதி கிராமத்தினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் மறுக்கப்படுவகிறது ‘’  என்கிறார் சிங்.

(செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

A resident fetches water from a well outside Denganmal village, Maharashtra, India, April 21, 2015. In Denganmal, a village in Maharashtra state, some men take a second or third wife just to make sure their households have enough drinking water. REUTERS/Danish Siddiqui


MARGINAL SPACES

Nobel Peace Laureate Kailash Satyarthi has asked Prime Minister Narendra Modi to declare the drought a national emergency, saying that the lives of more than 160 million children are at stake.

India's top court recently criticised authorities for delays in responding to the drought, saying that some states had an "ostrich-like attitude" towards the calamity.

State Chief Minister Devendra Fadnavis has urged banks to lend to small farmers, and asked state officials to step up relief measures to ensure no one is left out.

However, relief measures are not reaching some of the most marginalised people in the country: landless low-caste Dalits.

Dalits are more vulnerable to disasters because of their marginal social standing and discrimination. They also tend to live in settlements segregated from mainstream society, according to National Dalit Watch.

"Most Dalits are sharecroppers whose names are not in the records of the landowners, so they miss out on government relief," said Rajesh Singh of National Dalit Watch.

The lobby group has tracked discrimination against low-caste villagers after disasters since the Indian Ocean tsunami of 2004, and including the December floods in Chennai.

"They are neglected by default and by design, as they are not counted in the census and they are denied coping mechanisms such as government jobs and subsidised rations by high-caste villagers and local officials," Singh said.


(Reporting by Rina Chandran, Editing by Ros Russell.; Please credit the Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking, corruption and climate change. Visit news.trust.org to see more stories.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->