×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

வட இந்தியாவின் வெள்ளப்பெருக்கு, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்கச்செய்யும் அளவிற்கு அதிகரித்திருக்கிறது

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Friday, 26 August 2016 15:33 GMT

Boys stand on the roof of a partially submerged cremation ground on the flooded banks of river Ganga, in Allahabad, India, August 18, 2016. REUTERS/Jitendra Prakash

Image Caption and Rights Information

புது டெல்லி, ஆக. 26 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக  அங்கே வசிக்கும் பெண்களையும், குழந்தைகளையும் மத்திய தர குடும்பங்களிலும், உணவு விடுதிகளிலும், கடைகளிலும், விலைமாதர் விடுதிகளிலும் கூட ஆட்கடத்தல்காரர்களால் விற்கக்கூடிய ஆபத்து இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் வெள்ளிக்கிழமை அன்று  எச்சரித்திருக்கிறார்கள்.

கடும் பருவமழை காரணமாக கங்கை உட்பட அதன் கிளைநதிகள் அனைத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அவற்றின் கரைகளில் வாழ்ந்த வந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

வெள்ளப் பெருக்கால் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கிராமங்களிலிருந்த ஆயிரக்கணக்கான மண் குடிசைகள் நீரில் மூழ்கி இருக்கின்றன, விளை நிலைங்கள் அழிந்துவிட்டன. இவற்றின் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் இந்த ஐந்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேலை செய்து வரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், சென்ற ஆண்டு அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் 2008ல் பீகாரில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற சமயங்களில்  நடந்ததைப் போல.பேரிடருக்கு ஆளானவர்களைக் கடத்திச் செல்வது என்பது விரிவான அளவில் இருக்கிறது  என்றார்கள்.

“இதுபோன்ற அவசரக்காலங்களில்-குறிப்பாக வெள்ளம் ஏற்படும் காலங்களில், குழந்தைகள் எப்போதும் வடுப்படத்தக்க விதத்தில் இருக்கிறார்கள். குடும்பத்தினர் மேடான பகுதிகளுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படும்போது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு அவர்கள் வெளியேறிச் செல்லும்போது இது நடக்கிறது,” என்று சேவ் தி சில்ட்ரன் இந்தியா (இந்தியக் குழந்தைகளைப் பாதுகாப்போம்) என்ற அமைப்பின் தலைவர் தாமஸ் சாண்டி கூறினார்.

  “குழந்தையின் பெற்றோர் குழந்தைகளுடன் எப்போதும் நெருங்கிய தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படும் சமயத்தில், அறிமுகமற்றவர்கள் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில், பாலியல் துஷ்பிரயோகத்திற்கான அச்சுறுத்தல் மற்றும் குழந்தைகளைக் கடத்திச் செல்லுதல் அதிகமான அளவில் இருக்கிறது. இத்தகு சமயத்தில் குழந்தைகளில் அவலநிலையைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகளை மிகவும் விரைவாகக் கைப்பற்றிக்கொள்ள நிலையில், அமைப்புரீதியான குற்றமிழைக்கும் குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகளின் போதை மருந்துகள் மற்றும் குற்றப் பிரிவு அலுவலகத்தின்படி கிழக்கு ஆசியாவிற்கு அடுத்தபடியாக தெற்கு ஆசியாதான் ஆட்கடத்தலில் உலகில் மிக வேமாக வளர்ந்து வருகின்ற இரண்டாவது ஒரு பெரிய பிராந்தியமாக விளங்குகிறது.

ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் வாக் ஃப்ரீ பவுண்டேசனால் வெளியிடப்பட்டிருக்கிற 2016ஆம் ஆண்டு உலக அடிமைகள் அட்டவணையின்படி, உலகில் உள்ள 4 கோடியே 58 லட்சம் அடிமைகளில் 40 சதவீதத்தினர் இந்தியாவில் மட்டும் இருக்கிறார்கள்.

மிகவும் வறியநிலையிலுள்ள கிராமப்புறங்களிலிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் கும்பல்களால் நகர்ப்புறங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, எவ்விதமான பழிபாவங்களுக்கும் அஞ்சாத வேலையளிப்பவர்களிடம் அவர்களை கொத்தடிமைகளாக அல்லது வாடகைக்கு அமர்த்தி விடுகிறார்கள்.

இவர்களில் பலர் வீட்டு வேலையாட்களாக அல்லது செங்கல் சூளைகளில், சாலையோர உணவு விடுதிகளில் அல்லது சிறிய ஜவுளி மற்றும் எம்பிராய்டரி தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டுவிடுகிறார்கள்.  பல பெண்களும், சிறுமிகளும் விலைமாதர் விடுதிகளில் விற்கப்பட்டு விடுகிறார்கள்.

இவ்வாறு உலக வெப்பமயமாதலால், தெற்கு ஆசியாவில் ஏற்கனவே வறிய நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் மோசமான முறையில் வடுப்படத்தக்க விதத்தில், மனிதக் கடத்தலுக்கு ஆளாவது அதிகரிக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூகநல நிறுவனங்கள் செயல்படாமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சேகரித்து அளித்தல் மற்றும் மனிதாபிமான உதவிகளைச் செய்தல் போன்றவற்றை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்திச் செல்லப்படுதல், பாலியல் சுரண்டலுக்குப் பயன்படுத்தப்படுதல் மற்றும் கடத்தலுக்கு உள்ளாகுவது போன்ற இடர்களுக்கு இட்டுச் செல்கிறது.

“குழந்தை நட்பு இடங்கள்”

பீகார் அரசு அதிகாரிகள் இவ்வாறு இடர்கள் இருப்பது தங்களுக்குத் தெரியும் என்றும், எனவே ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக யூனிசெப் என்னும் ஐ.நா. குழந்தைகள் ஏஜன்சி, சேவ் தி சில்ட்ரன் மற்றும் ஆக்சன் எய்ட் போன்ற  தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்கள்.

“இப்போது வெள்ளம் ஏற்பட்டிருப்பதற்கு முன்பு, இந்த மாதத்தின் துவக்கத்தில் ஆட் கடத்தல் பிரச்சனை குறித்து கூட்டங்கள் நடத்தி இருந்தோம்,”  என்று பீகார் சமூக நலத்துறை இயக்குநர் இமாமுதீன் அகமது கூறினார்.

“நாங்கள் மக்களை உஷார்படுத்திக்கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக காவல்துறை, தொழிலாளர்நலத்துறை மற்றும் சமூக நலத்துறையைச் சேர்ந்தவர்களையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம்,” என்றார்.

மேலும் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து குழந்தைகளைக் கடத்திச் செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அங்கிருந்து புறப்படும் ரயில்களிலும் ஆய்வுகளை செய்து கொண்டிருக்கிறோம் என்று அதிகாரிகள் மேலும் கூறினார்கள்.

பல பள்ளிக்கூடங்கள் அழிந்துவிட்டதால் அல்லது மூடப்பட்டு விட்டதால், “குழந்தை நட்பு இடங்கள்” ஏற்படுத்தி, குழந்தைகள் விளையாட, கற்றுக்கொள்ள மற்றும் குடும்பத்தினருடன் இருந்திட ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித்தந்திருக்கிறோம் என்றும் தொண்டு நிறுவனத்தினர் கூறினார்கள்.

“நன்கு பயிற்சி பெற்றவர்கள் தங்களுடன் இருப்பதன் மூலம் குழந்தைகள் தங்களுக்குள்ள சவால்களை விவாதித்து, தங்கள் கவலைகளைக் குறைத்துக்கொள்வதை உத்தரவாதப்படுத்திட முடிகிறது,”  என்று பீகாரில் சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் பொது மேலாளர் ரஃபய் ஹூசேன் கூறினார்.

“எங்கள் அனுபவத்திலிருந்து, குழந்தைகளுக்கு இதுபோன்ற நெருக்கடி காலங்களில், அவர்களின் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் சகவாசம் தேவைப்படுகிறது. அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த நலன்களைக் கருத்தில் கொண்டு இவ்வாறு அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித்தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்,” என்று கூறினார்.

இந்தியா வழக்கமாக ஜூன் – செப்டம்பர் மாதங்களில் பருவமழைகளை எதிர்கொள்கிறது. இது அதன் விவசாயத் துறைக்கு மிகவும் முக்கியமாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதத்தை இதன்மூலம்தான் அது நிறைவேற்றுகிறது. மேலும் இதன்மூலம் நாட்டிலுள்ள 130 கோடி மக்களில் சரிபாதிப்பேருக்கு, வேலை அளிக்கிறது.

ஆனால் பல மாநிலங்களில் மழை பெய்யும்போது அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன, வெள்ளம் ஏற்பட்டு பயிர்கள் அடித்துச் செல்லப்படுகின்றன, வீடுகளைத் தரைமட்டமாக்குகின்றன, வாழ்வாதாரங்களை பாழ்படுத்துகின்றன. ஏற்கனவே வறிய நிலையில் வாழும் மக்களுக்கு மேலும் சொல்லொணாத் துன்ப துயரங்களைக் கொண்டுவருகிறது.

இந்த ஆண்டு பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறைந்தபட்சம் 130 பேரைக் கொன்றுள்ளது. பீகாரின் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 24 மாவட்டத்தைச் சேர்ந்த பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி நிவாரண முகாம்களில் அல்லது சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொலைக்காட்சிப் படங்கள், மக்கள் வெள்ளத்தில் கழுத்தளவு நீரில் நடந்து வருவதை அல்லது பகுதி மூழ்கிய கட்டிடங்களின் கூரைகள் மீது அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. பலர் பேரிடர் பாதுகாப்புக் குழுக்களின் படகுகளில் ஏறிக்கொண்டு இருப்பதைக் காட்டுகின்றன.

வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்திருக்கிறோம் என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால். தேவையான அளவிற்கு நிவாரண மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் நடைபெறவில்லை என்று இம்மாநிலங்களில் செயல்பட்டுவரும் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

“நாங்கள் அரசு நிர்வாகத்தினருடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், அவ்வப்போது உள்ள நிலைமைகளை அவர்களுக்கு அளித்து வருகிறோம், ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். ஆயினும், அனைத்து வெள்ள நிவாரண முயற்சிகளும் நெருக்கடியுடன் ஒப்பிடும்போது போதுமானவை அல்ல,” என்று ஆக் சன் எய்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் (எக்சிகியூடிவ் டைரக்டர்) சந்தீப் சச்ரா கூறினார்.

“குறிப்பாக, பல இடங்களில் போதுமான அளவிற்கு படகுகள் இல்லை. பேரிடம் ஏற்படும் சமயங்களில் அவற்றை எதிர்கொள்வதற்கு மிகப்பெரிய முயற்சி தேவை. அவசரநிலையில் மீட்பு மற்றும் நிவாரணத்தை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் துரிதகதியில் செல்வதற்கான ஏற்பாடுகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.”(செய்தியாளர்: நிதா பல்லா, கூடுதல் செய்தியாளர்: ஜடேந்தர் டாஷ்; எடிட்டிங்: ராஸ் ரஸ்ஸல்; செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

A dog sits on a wall of a house at a slum area on the flooded banks of the river Yamuna in Allahabad, India, August 22, 2016. REUTERS/Jitendra Prakash

"CHILD FRIENDLY SPACES"

Government officials in Bihar said they were aware of the risk of exploitation and were working with charities such as Save The Children, ActionAid and the U.N. children's agency UNICEF to curb instances of trafficking.

"Before the current floods, we had held meetings early this month on the issue of human trafficking," said Imamudin Ahmad, Director of Bihar's social welfare department.

"We are sensitising people and are involving everyone including the police department, labour department and social welfare departments."

Officials added that authorities were also checking trains, often used to transport victims, originating from impoverished districts where children labour is commonly sourced.

With schools destroyed or shut down, aid agencies said they were creating "child friendly spaces" to give children a safe environment to play, learn and be with their families.

"The company of others, along with trained facilitators, ensures that children are able to discuss their challenges and reduce their anxiety," said Rafay Hussain, General Manager for Save the Children in Bihar.

"From our experience, we have seen that children need the company of their parents, family and friends during such crises - and every effort should be made to ensure that they do remain in such company, for their safety and overall well-being."

India usually experiences monsoons from June to September which are crucial for its agriculture sector, making up 18 percent of its gross domestic product and employing almost half the country's 1.3 billion people.

But in many states the rains frequently cause landslides and flooding that wash away crops, demolish homes and devastate livelihoods - pushing already impoverished families to brink.

The floods in Bihar this year have killed at least 130 people. Almost one million people across 24 of Bihar's 38 districts have been evacuated from their homes and are either in relief camps or have sought shelter on embankments and roads.

Television pictures showed people wading shoulder-high in floodwaters or sitting on the rooftops of partially submerged buildings, while others were seen climbing into boats as they were rescued by India's disaster response teams.

Authorities said that they had managed to reach most affected communities, but aid agencies working in the state said rescue and relief efforts fell short of what was needed.

"We have also been working with the administration providing status updates, offering support and coordinating efforts. However all flood relief efforts are inadequate in terms of the scope and extent of the crisis," said Sandeep Chachra, Executive Director of ActionAid India.

"In particular many areas reported a shortage of boats. We need greater effort in building disaster preparedness and ensuring rapid response to emergency rescue and relief."

(Reporting by Nita Bhalla. Additional reporting by Jatindra Dash in Bhubaneswar. Editing by Ros Russell. Please credit the Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking, corruption and climate change. Visit news.trust.org)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->