×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

ஆறு மாத சிறைபிடிப்பிற்குப் பிறகு வீடுதிரும்பிய தமிழ்நாட்டு மீனவர்கள் வளைகுடாவில் அனுபவித்த துன்பங்களை நினைவு கூர்கின்றனர்

Wednesday, 12 April 2017 06:21 GMT

Fisherman S Geroge, released after six months in detention in Iran, at the Chennai airport before heading home to Kanyakumari in southern Indian state of Tamil Nadu, April 6, 2017. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

Image Caption and Rights Information

சென்னை, ஏப். 12 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தன் மனைவியையும் குழந்தைகளையும் மீண்டும் பார்க்கவே மாட்டோம் என்ற அச்சத்துடனேயே  தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவரான எஸ். ஜார்ஜ் தனது படகில் ஆறுமாத காலத்திற்கு  நாட்களைக் கழித்திருக்கிறார்.

அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஈரானிய கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்தார்கள் என கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களில் ஜார்ஜும் ஒருவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்ரைன் கடல் பகுதியில் மீன்பிடிப் படகுகளில் வேலை செய்வதற்கு என தங்கள் வீடுகளை விட்டுக் கிளம்பியபோது இத்தகைய துன்பத்திற்கு ஆளாவோம் என்று தாங்கள் நினைக்கவே இல்லை என்று கடந்த பல மாதங்களாக தங்கள் குடும்பத்தோடு எந்தவித தொடர்புமின்றி இருந்து கடந்த வாரம் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய அந்த மீனவர்கள் குறிப்பிட்டனர்.

“நாங்கள் பிடிபட்ட பிறகு பல நாட்களுக்குக் குழப்பம் தான் நிலவியது” என ஜார்ஜ் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

“நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சர்வதேசக் கடல் எல்லையைக் கடந்து ஈரானுக்குள் நுழைந்திருக்கிறோம்; அதனால் கைது செய்யப்பட்டிருக்கிறோம்  என்று எங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.  அதைத் தொடர்ந்து நடந்தது போல் எங்களுக்கு நடக்கும் என்று நாங்கள் எப்போதும் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை.”

வளைகுடாப் பகுதியில் உள்ள பக்ரைன், குவெய்த், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள், ஓமன் ஆகிய ஆறு நாடுகளிலும் சுமார் 60 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக இடம்பெயர்ந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பலரும் ஆட்கடத்தலுக்கு ஆளாகி, சுரண்டப்படுகின்றனர் என இதற்கு எதிரான இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

 “மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகமாகியுள்ளதை நாங்கள் காண்கிறோம்” என சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் லாப நோக்கற்ற நேஷனல் டொமஸ்டிக் வொர்க்கர்ஸ் மூவ்மெண்ட்-ஐச் சேர்ந்த ஜோசஃபின் வளர்மதி குறிப்பிட்டார்.

 “இந்த மீனவர்கள் குழு திரும்பி வந்துவிட்ட போதிலும் இன்னும் 24 பேர் இதே மாதிரியான சூழ்நிலையில் சிக்கி, தற்போது போக்கிடமின்றி தவித்து வருகின்றனர். இவர்களில் பலருக்கும் எத்தகைய விசாவின் கீழ் தாங்கள் பயணம் செய்தோம் என்றோ அல்லது வேலை செய்யும் இடத்தின் விதிமுறைகள், நிலைமைகள் பற்றியோ தெளிவாக அறியாதவர்களாகவே உள்ளனர்.”

தங்களுக்கு மிகக் குறைந்த  அளவிலான உணவே வழங்கப்பட்டதாகவும், கழிப்பறைகளிலிருந்து தண்ணீரைப் பிடித்துக் குடிக்குமாறு கட்டாயப்படுத்தப் பட்டதாகவும், தோப்புக் கரணம் போட வைக்கப்பட்டதாகவும், பெரும்பாலான நேரங்களில் தாங்கள் பட்டினியோடு இருந்ததாகவும் ஜார்ஜ் குறிப்பிட்டார். ஈரானில் ஒரு சிறையில் ஒரு சில நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் கடற்கரைப் பகுதிக்கு வெளியே அவர்களின் படகுகளிலேயே இந்த மீனவர்கள் சிறை வைக்கப் பட்டிருந்தனர்.

“நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தோம்” என ஜார்ஜ் கூறினார். “சில நேரங்களில் எங்களுக்கு ஒரே ஒரு ரொட்டி மட்டுமே வழங்கப்பட்டது. அதைக் கொண்டே நாள் முழுவதையும் கழிக்க வேண்டியிருந்தது. மீன் பிடிப்பதைக் கொண்டுதான் எங்கள் வாழ்க்கைக்கான ஊதியத்தை ஈட்டுகிறோம். என்றாலும் சாவைப் பற்றியே அஞ்சியபடி படகில் வாழ்க்கையைக் கழிப்பது என்பதற்காக நாங்கள் இந்த வேலைக்குச் செல்லவில்லை.”

என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு மொழி ஒரு தடையாக இருந்தது என ஏ. மரிய ஜோசஃப் கென்னடி கூறினார்.

“நான்கு நாட்களுக்கு நாங்கள் ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். அதன் பிறகு மீண்டும் படகுக்கே திரும்பி வந்தோம். ஆடு-மாடுகளைப் போல எங்களை நடத்தினார்கள்” என கென்னடி குறிப்பிட்டார்.

இந்த விஷயம் குறித்து புதுதில்லியில் உள்ள ஈரான் நாட்டுத் தூதரகம் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.

பத்தில் ஒருவர்

மாநிலத்திலிருந்து வேலைக்காக பிற இடங்களுக்குச் சென்றவர்கள் குறித்த விரிவான முதல் ஆய்வு எனக் கருதப்படுகின்ற தமிழ்நாட்டிலிருந்து வெளியிடங்களுக்குக் குடிபெயர்ந்தோர் குறித்த 2015ஆம் ஆண்டிற்கான ஆய்வின்படி தமிழ்நாட்டில் பத்தில் ஒரு குடும்பத்திலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்கின்றனர்.

வெளிநாடுகளில் வேலை கிடைப்பதற்காக இவ்வாறு குடியேறும் நபர்கள் சராசரியாக ரூ. 1,00,000/-  வரை செலவழிக்கின்றனர் என்றும் இதில் பாதித் தொகை ஆட்களை வேலைக்கு அமர்த்தும் முகவர்களுக்குச் செல்கிறது என்றும், மீதித் தொகை விசா, பயணம் ஆகியவற்றுக்காகச் செலவாகிறது என்றும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

வெளிநாடுகளில் வேலை செய்யும் பெண்களில் 39 சதவீதம் பேரும், ஆண்களில் 21 சதவீதம் பேரும் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஊதியத்தைப் பெறவில்லை என்று குறிப்பிட்டதாகவும் தமிழ்நாட்டில் 20,000 குடும்பங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 “பெரும்பாலும் இந்தத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். வளைகுடாப் பகுதியில் நிலவும் வேலைச் சூழலோடு இவர்களால் ஒத்துப் போக முடிவதில்லை. மிக மோசமான சூழ்நிலைகளில் தங்கள் ஊதியத்தையும் கைவிட்டுவிட்டு இவர்கள் திரும்பி வருகின்றனர்” என இந்த குடிபெயர்வோர் குறித்த ஆய்வை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான  பெர்னார்ட் டி சாமி குறிப்பிட்டார்.

 “அதன் பிறகு அவர்கள் முடிவேயில்லாத கடன்வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இத்தகைய சூழ்நிலையானது சில நேரங்களில் மீண்டும் வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்ல அவர்களை நிர்ப்பந்திக்கிறது.”

கடலிலிருந்து பிடித்த மீன்களின் அடிப்படையில் ஊதியத்தைப் பெறும் இந்த மீனவர்கள், எந்தவிதமான சேமிப்புமின்றி தாங்கள் வீட்டிற்குத் திரும்பியுள்ளதாகவும், பெருங்கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

இதேபோன்ற துயர நிலைக்கு மற்றவர்களும் ஆளாவதைத் தடுக்கும் வகையில், இவ்வாறு குடிபெயர்ந்து செல்வதில் உள்ள அபாயங்கள் குறித்து அறிவுறுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

“இதிலுள்ள அபாயங்கள் குறித்து எனக்குப் புரியாமல் இருந்தது; அல்லது அவை குறித்து நான் மதிப்பிடவில்லை” என்று குறிப்பிட்ட ஜார்ஜ் இப்போது தாம் பக்ரைனுக்குச் செல்வதற்காக வாங்கியிருந்த ரூ. 1,00,000 கடனை திருப்பிச் செலுத்துவது பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

“யாரும் எனக்குச் சொல்லவும் இல்லை. வளைகுடா நாட்டில் ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று பலரும் கனவு காண்கிறார்கள். அது பயங்கர கனவாக மாறி விடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

A group of 15 fishermen outside the Indian embassy in Bahrain before heading for India on April 6, 2017. Picture courtesy National Domestic Workers Alliance

ONE IN TEN

According to the Tamil Nadu Migration Survey 2015, the first comprehensive study on emigration from the state, roughly every tenth household has one or more workers abroad.

The survey showed that a migrant spends an average of 100,000 rupees ($1,500) to secure a job overseas, with half going to recruitment agencies and the rest for visas and travel.

The survey of 20,000 households also revealed that 39 percent of women and 21 percent of men who work abroad reported not receiving the promised wages.

"Often workers get duped, can't deal with the work situation in the Gulf and come back in adverse circumstances, forgoing their income," said Bernard D'Sami, co-author of the migration survey.

"They then get trapped in an unending cycle of debt that sometimes forces them to go back to the Gulf and work."

Paid on the basis of the catch they brought back from the sea, the fishermen said they were back home with no savings and big loans that needed to be paid back.

The fishermen called for urgent action to prevent others suffering similar ordeals, including education campaigns about the risks of migration.

"I didn't understand or assess the risks," said George, now worried about repaying the nearly 100,000 rupee loan he took out to get to Bahrain.

"And nobody told me either. So many people dream of a Gulf job. The government needs to make sure it doesn't become a nightmare."

($1=64.2660 Indian rupees)

(Reporting by Anuradha Nagaraj, Editing by Ros Russell; Please credit the Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking and climate change. Visit www.trust.org)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->