×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – இந்திய நெசவாலையில் பணிபுரிந்த பெண், காவலர் பணி என்கிற புதுவாழ்க்கையை நோக்கி ஓடுகிறார்

Thursday, 3 August 2017 23:07 GMT

Garment worker Muthulakshmi Mariappan stands with her brother in a field behind their home in N Pudur village in Tamil Nadu, India, July 28, 2017. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

Image Caption and Rights Information

ராஜபாளையம், ஆக.  4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பொழுது புலர்வதற்கு முன்பாகவே முத்துலஷ்மி மாரியப்பன் தன் வீட்டை விட்டு வெளியே வந்து வேகமாக ஓடத் துவங்குகிறார்.

அதிகாலை நேரத்தின் காற்றோட்டமில்லாத சூழலில் அவருக்கு மூச்சுத் திணறிய போதிலும் தன்னை சமாளித்துக் கொண்டு கால்களை நீண்ட அடிகளாக வேகமாக வீசிப் போட்டபடி அவர் விரைவாக ஓடத் துவங்குகிறார். செருப்பில்லாத கால்களில் குத்து முட்களையும் அவர் பொருட்படுத்துவதில்லை.

நூற்பாலையில் வேலை செய்யும் தொழிலாளியான அந்த இருபது வயது பெண்ணுக்கு வேகமாக ஓடுவதென்பது பெண்காவலராக மாறுவதற்கான முன் நிபந்தனை ஆகும். ஒரு பெண் காவலராக ஆவதென்பது அவரது கனவை நனவாக்கும்.

ராஜபாளையத்தில் உள்ள அவரது நெசவாலையில் குறைந்த சம்பளத்திற்காக வேலையில் மூழ்கியிருப்பது என்ற சுழலில் இருந்து அவர் விடுபடுவதற்கு இந்த வேலை உதவியாக இருக்கும். மேலும் அது புதியதொரு அந்தஸ்தையும் அவருக்கு அளிக்கும் என்பதோடு, பாரம்பரியமான பெண்களின் தலைவிதியிலிருந்து விடுபடுவதற்கும் அவருக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பும் ஆகும்.

“தேர்வில் வெற்றி பெற்று, போலீஸ் அகாதெமி பயிற்சிக்கு ஏற்றுக் கொள்ளப்படுவது என்பது மதிப்பிற்குரிய ஒரு வேலையையும் சிறந்த எதிர்காலத்தையும் எனக்கு அளிக்கும்” என முத்துலஷ்மி கூறினார்.

“எனது மூத்த சகோதரிகளும் இந்தப் பகுதியில் இருந்த மற்ற பெண்கள் எல்லோரையும் போலவே இங்கிருக்கும் நெசவாலைகளில் வேலை செய்து, பின்பு திருமணம் செய்து கொண்டு போனார்கள். நெசவாலையில் வேலை செய்யும் சாதாரண பெண் என்பதற்கு மேலாக எதையாவது செய்ய வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன்.”

பருத்தியை இழையாகவும், துணியாகவும், ஆடையாகவும் மாற்றும் தமிழ்நாட்டிலுள்ள 1600 நெசவாலைகளில் வேலை செய்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ள 4 லட்சம் தொழிலாளர்களில் முத்துலஷ்மியும் ஒருவர்.

ஆண்டுக்கு 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு விற்பனை செய்யும் இந்தியாவின் நெசவாலை மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வரும் அவர் நாளொன்றுக்கு ரூ. 270-ஐ ஊதியமாகப் பெற்று வருகிறார்.

“இந்தப் பகுதியில் வேறெந்த வாய்ப்பும் இல்லை என்பதாலேயே பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த வேலையைச் செய்து வருகிறார்கள்” என டிரஸ்ட் ஃபார் எஜுகேஷன் அண்ட் சோஷியல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்ற லாபநோக்கற்ற அறக்கட்டளையைச் சேர்ந்த ஜோசப் ராஜ் கூறினார்.

 “இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறிச் செல்வதற்கான வழிகளை இளம் தொழிலாளர்கள் தேடத் துவங்கியுள்ளனர். அவர்கள் ஓர் அரசாங்க வேலையைப் பெறுவதற்கான பல்வேறு போட்டித் தேர்வுகள் பற்றிய வருடாந்திர நிகழ்ச்சி நிரலை நாங்கள் தயாரித்து வருகிறோம்.”

தறிகளிலிருந்து புத்தகங்களை நோக்கி

22வயதான பூமாலை பூமாரி ஜனவரி மாதத்தில் இருந்தே போலீஸ் தேர்வுக்காகப் படிக்கத் துவங்கியுள்ளார். ஒவ்வொரு நாளும் நெசவு நெய்யும் தறிகளில்  நீண்ட மணிநேரங்களை கழித்த பிறகு வீட்டை நோக்கிச் சென்று சமையல் மேடையின் மேலேறி குப்பையாகக் கிடக்கும் பரணில் இருந்து தன் புத்தகங்களை கீழே இறக்கி, நேராக தன் வேலையில் இறங்கி விடுகிறார்.

“தறியில் வேலை செய்யாத நேரத்தில் எல்லாம் நான் படித்துக் கொண்டிருப்பேன்” என அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

 “அது ஒன்றும் எளிதானதும் அல்ல. ஏனென்றால், புத்தகங்கள், பாடதிட்டம், கேள்விகள் ஆகிய அனைத்துமே நான் பள்ளிக்கு சென்ற காலத்திலிருந்து முற்றிலுமாக மாறிவிட்டன. மீண்டும் துவங்குவது கடினமாகத்தான் உள்ளது.”

மூன்று மாத காலமாக பூமாரி, முத்துலஷ்மி மற்றும் 11 இதர பெண்கள் – இவர்கள் அனைவருமே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டவர்கள் – அறிவியல், கணிதம், உளவியல் ஆகியவற்றைப் படிப்பதோடு, தங்களின் பொது அறிவையும் மேம்படுத்தி வருகின்றனர்.

ராஜ் அவர்களின் அமைப்பினால் வழங்கப்பட்ட பாட நூல்களைப் பயன்படுத்தி எழுத்துத் தேர்வுக்காக நெரிசல் மிக்க அறைகளில் படித்துக் கொண்டு வருகின்றனர். அதுதான் காவல்துறையின் நுழைவதற்கான முதல் நடவடிக்கை ஆகும்.

 “இந்தத் தேர்வுக்க்காக மனுச்செய்ய நான் நினைத்தபோது, நெசவாலையில் இருந்த எனது நண்பர்கள் அந்தக் கருத்தையே மறுதலித்தார்கள்; நான் தோல்வியடையத்தான் போகிறேன் என்றும் அவர்கள் கூறினார்கள்.” என முத்துலஷ்மி கூறினார்.

“தேர்வில் நாங்கள் வெற்றி பெற்றபிறகு, மற்றவர்களும் இது செய்யக் கூடிய செயல்தான் என்று நினைத்து, தாங்களும் முயற்சி செய்ய விரும்பினர். இப்போது அவர்கள் எனது குறிப்பேட்டை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”

அவர்களில் பூமாரி, முத்துலஷ்மி உள்ளிட்ட ஆறு பேர் கடந்த மே மாதத்தில் தேர்வில் வெற்றி பெற்றனர்.

பூமாரியின் தாய் மரகதம் இப்போது நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறார்.

“தனது படிப்பை நிறுத்திவிட்டு தறிகளில் முழுநேரம் வேலை செய்ய வேண்டி வந்தபோது அவள் அழுதது என் நினைவுக்கு வருகிறது. நானும் அப்போது மோசமாகத் தான் உணர்ந்தேன். இருந்தாலும் அப்போது வேறெந்த வழியும் எனக்கில்லை. ஆனால் இப்போது அவள் வெளியே சென்று நல்லதாக எதையாவது செய்வாள் என்ற நம்பிக்கை கொஞ்சம் வந்திருக்கிறது.”

என்றாலும் இதைக் கொண்டாடுவதற்குத்தான் நேரமில்லை. ஏனென்றால் அவர்களின் முன்னால் உள்ள அடுத்த தடைக்கல் என்பது உடற்திறனுக்கான தேர்வு. அது மிகப்பெரிய சவாலும் கூட.

வெறுங்காலுடன் குண்டெறியும் போட்டி

வழக்கமாக உடுத்தும் சல்வார் கமீஸுக்குப் பதிலாக விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் கால் சராய், டி ஷர்ட் ஆகியவற்றை அணிந்திருந்த முத்துலஷ்மி வெறுங்காலுடன் பயிற்சி செய்வதையே விரும்புகிறார்.

என். புதூர் கிராமத்தில் அவரது வீட்டிற்கு அருகே உள்ள ரயில்வே பாதையின் பக்கத்தில் உள்ள பயன்படுத்தப்படாத நிலத்தில் அவரது சகோதரன் அடையாளம் செய்து வைத்திருந்த 400 மீட்டர் பாதையில் அவர் ஓடுகிறார்.

அதன் பிறகு அவர் குண்டெறியும் பயிற்சியைச் செய்கிறார். அதன் பிறகு நீளத்தாண்டுதல் பயிற்சி.

10 மணி நேரம் வரை நீளம் ஷிஃப்ட்களில் நெசவாலையில் ஆண்டுக் கணக்காக நின்று கொண்டே வேலை செய்தது அதற்கேயுரிய பாதிப்புகளை அவரிடம் ஏற்படுத்தியிருந்தது. முத்துலஷ்மியின் முழங்கால்கள் வேலை செய்ய மறுக்கின்றன. தனது நீளத் தாண்டுதல் பயிற்சிக்காக ஓடுவதற்கு அவர் திணற வேண்டியதாயிருக்கிறது.

“எனது பழைய பள்ளியில் ஆசிரியர்கள் நான் பயிற்சி செய்வதற்கு அனுமதி அளித்தார்கள்.” என முழங்கால்களை நீவி விட்டுக் கொண்டே அவர் சொன்னார்.

 “என்றாலும் எனது முழங்கால்கள் மிகவும் மோசமாக வலிக்கின்றன. (நீளத் தாண்டுதலுக்காக) நான் ஓடி வருவது    சிறப்பானதாக இல்லை. இதற்கென வரையறுக்கப்பட்ட தூரத்தை நான் கடந்துவரவில்லை. ஆலையிலிருந்து நான் திரும்பி வரும்போது எனது கால்கள் வலியெடுக்கின்றன. இப்போது இந்தச் சிரமம் மேலும் அதிகமாகவே இருக்கிறது.”

இத்தொழிலில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள பல பெண்களும் அதிகமான நேரத்திற்கு வேலை செய்பவர்களாக, உரிய எடை குறைந்தவர்களாக, சோகை பிடித்தவர்களாக, தகுதியற்றவர்களாகத்தான் இருக்கின்றனர் என மருத்துவர்களும் பிரச்சாரகர்களும் கூறுகின்றனர்.

தனது மகள் தனது சக்தியையும் மீறியே இதைச் செய்து வருகிறார் என்பதையும், அவரது தாங்கு சக்தி மிகவும் குறைவு என்பதையும் முத்துலஷ்மியின் தாயாரான முத்துக்குட்டி நன்கு உணர்ந்தே இருக்கிறார்.

“தாங்கு சக்தியை வளர்த்துக் கொள்வதற்காக நான் அவளுக்கு கொஞ்சம் பாதாம் பருப்பு, பால், அதிகமான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொடுத்து வருகிறேன்.” என அவர் குறிப்பிட்டார்.

“முதலில் நாங்கள் கொஞ்சம் தயங்கத்தான் செய்தோம். பின் ஒரு குடும்பம் என்ற வகையில் அவளுக்கு உதவி செய்ய தீர்மானித்தோம். அவளுக்கு உதவி செய்ய எங்களால் முடிந்ததைச் செய்வோம்.”

அயனாவரம் கிராமத்தில் பூமாரிக்காக அவரது தாய் மரகதம் மாதுளம்பழத்தைப் பிழிந்து கொண்டே அவரை பால் அருந்துமாறு நச்சரித்துக் கொண்டிருந்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள உடல்திறனுக்கான சோதனைகளுக்கு முன்பாக தங்களின் உடல் திறனில் கவனம் செலுத்துவதற்காக அந்த இரண்டு பெண்களும் வேலைக்கு ஒரு சில நாட்கள் விடுப்பு விட்டிருந்தார்கள்.

இந்த இரண்டு குடும்பங்களுக்குமே இதனால் ஊதிய இழப்பு என்பதுதான் அதன் பொருள்.  என்றாலும் இந்தத் தேர்விலும் வெற்றி பெற்று, அனைவரும் விரும்பும் வேலையை அவர்கள் பெற வேண்டும் என்பதே அந்தக் குடும்பங்களின் விருப்பமாக இருந்தது. கிராமத்து வழக்கமான அவர்களை திருமணம் செய்து கொடுப்பது என்பது பற்றிய சிந்தனை எதையும் அவர்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டனர்.

“அந்த சீருடை எங்களுக்கு கொஞ்சம் மரியாதையைக் கொண்டு வரும்” என்று வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த பூமாரி குறிப்பிட்டார்.

“இல்லையென்றால் பாடி, சுரண்டப்பட்டு, ஒதுக்கித் தள்ளப்படும் ஆலையில் வேலை செய்யும் பெண்கள் என்பதாகவே நாங்கள் இருப்போம். நாங்கள் மட்டும் பெண் காவலர்களாக மாறினால், மக்கள் எங்களைப் பார்த்து பயப்படுவார்கள்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: லிண்ட்சே க்ரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Garment worker Muthulakshmi Mariappan (right) with her brother and sister in their home in N Pudur village in southern Indian state of Tamil Nadu, July 27, 2017. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

LOOMS TO BOOKS

Poomalai Poomari, 22, started studying for the police exam in January. Every day, after long hours at the looms weaving, she would head home, climb onto the kitchen ledge to bring down her books from a cluttered loft and get straight to work.

"Whenever I was not working at the looms, I would study," she told the Thomson Reuters Foundation.

"It was not easy because the books, the syllabus, the questions had all changed from the time I went to school. It was difficult to restart."

For three months, Poomari, Mariappan and 11 other women workers - all school dropouts - studied science, maths and psychology, as well as working on their general knowledge.

Using study material from Raj's organisation, the girls crammed for a written exam - the first stepping stone to the police department.

"When I first thought about applying for the exam, my friends at the mill dismissed the idea, saying I was only going to fail," Mariappan said.

"After we passed the exam, others think it is doable and want to try. Now, they want my notes."

Six of them, including Poomari and Mariappan, cleared the exam in May.

Poomari's mother Maragatham felt relief and happiness.

"I remember her crying bitterly when she had to stop her education and work full time at the looms. I felt bad, but there was no choice then. Now there is some hope that she will go out and do something better."

But there was no time to celebrate, because the next hurdle was the physical exam - and that was the bigger challenge.

Poomalai Poomari and her niece at the door of their one-room home in Ayanapuram village in Tamil Nadu, India. July 27, 2017. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

BAREFOOT SHOT PUT

Trading her traditional salwar kameez for track pants and a T-shirt, Mariappan prefers to train barefoot.

She runs on a 400-metre track, marked out by her brother in an unused field by the railway lines near her home in N Puthur village.

Next she tries her hand at shot put, then long jump.

Years of standing in a mill doing shifts that last up to 10 hours have taken a toll; Mariappan's knees have given way and she is struggling with the run-up to her long jump.

"In my old school, the teachers have agreed to let me practice," she said, massaging her knee.

"But my knees are hurting bad(ly). My take-off is not great and I am not clearing the mandated distance. My legs ache when I come back from the mill. Now, the strain is even more."

Poomalai Poomari (standing) and her mother Maragatham pose for a photo in their home in Ayanapuram village in Tamil Nadu, India, July 27,2017. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

Many girls employed by the industry are overworked, underweight, anaemic and unfit, doctors and campaigners say.

Muthukutty Mariappan is acutely aware of the fact that her daughter is pushing her limits and low on stamina.

"I am giving her some almonds, milk, more vegetables and fruits to help build her stamina," she said.

"Initially we were hesitant but then as a family we decided to support her. We will do what we can to help her."

In Ayanavaram village, Maragatham spends on pomegranates for Poomari and coaxes her to drink milk.

Both girls have taken a few days off work to focus on their fitness ahead of the physical tests, scheduled for August.

It means a loss of salary for both households, but the families are counting on the girls to clear the exams and get the coveted job, even dismissing any thought of getting them married as is the norm in the villages.

"That uniform will bring us some respect," said Poomari, who was confident of making the grade.

"Otherwise we are abused, exploited and brushed aside as mill girls. If we become policewomen, people will fear us."

($1 = 63.6300 Indian rupees) (Reporting by Anuradha Nagaraj, Editing by Lyndsay Griffiths. Please credit the Thomson Reuters Foundation, the charitable arm of Thomson Reuters, that covers humanitarian news, women's rights, trafficking and climate change. Visit http://news.trust.org)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->