×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

விளையாட்டு துவங்கியது: இணையம் மூலமான இந்திய சாகச முயற்சியில், கடத்தலுக்கு ஆளான குழந்தையின் எதிர்காலத்தை விளையாடுவோர் முடிவு செய்கின்றனர்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Friday, 17 November 2017 16:07 GMT

Children play as they sit atop a police barricade on a street in New Delhi in this 2013 archive photo. REUTERS/Adnan Abidi

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, நவ.17 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஒரு இளம்பெண் வாழ்க்கையைக் காப்பாற்றுவதுதான் அதன் இலக்கு. நன்கறிந்த  விருப்பங்கள், ஒரு நிலைபாட்டை மேற்கொள்வது ஆகியவையே இதற்கான ஆயுதங்கள்; மறுபுறத்தில் இந்த விளையாட்டில் ஈடுபடுவோரிடம் உண்மையான வாழ்க்கையில் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ளுமாறு கோரப்படுகிறது.

இந்தியாவின் புதிய இணைய தள விளையாட்டான “(அன்)ட்ராஃபிக்டு”-இல் குழந்தைப் பருவ அடிமைத் தனத்தில் ஈடுபடுத்துவதற்காக கடத்தப்படுவதில் இருந்து 13 வயது சிறுமியை தடுத்துக் காப்பாறுவது என்பதே நோக்கமாக உள்ளது.

செய்முறை வடிவிலான இந்தக் கதை இதில் விளையாடுபவர்களை பெற்றோர், காவலர், ஏஜெண்டுகள், பள்ளி நண்பர்கள், மற்றவர்களின் பார்வையில் இருந்து “அவளது வாழ்க்கைப் பாதை முழுவதையுமே ஏழே நாட்களில் மாற்றி அமைக்கக் கூடிய பாதையை மாற்றி அமைப்பதற்கான” விருப்பங்களை தேர்வு செய்வதாக அமைகிறது.

இந்த இணையம் மூலமான சாகச நிகழ்வை உருவாக்கியுள்ள கைலாஷ் சத்யார்த்தி சில்ட்ரன் ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இந்த விளையாட்டு குழந்தைகளை கடத்திச் செல்வது என்ற பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவித்திருந்தது.

“ஆட்கடத்தலைப் பற்றியும், நாடு முழுவதிலும் குழந்தைகளுக்கு என்ன நடந்து வருகிறது என்பதைப் பற்றியும் எளிமையாகப் புரிய வைப்பதே இதன் கருத்தாக அமைகிறது” என ஃபவுண்டேஷனின் ஓர் அதிகாரி தெரிவித்தார்.

“மக்கள் இந்த நிலைமையை தங்களது வாழ்க்கைச் சூழல்களில் அடையாளம் காண முடிவது; அது குறித்து ஏதாவதொரு நடவடிக்கையை எடுப்பது என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.”

குழந்தைகள் கடத்தல் , பாலியல் ரீதியிலான கொடுமைகள் ஆகியவற்றுக்கு எதிராக சத்யார்த்தி நடத்திய ஒரு மாத கால நீண்ட பயணத்தின் முடிவில், அக்டோபர் மாதத்தில்  இந்த இணைய வழி விளையாட்டு வெளியிடப்பட்டது.

ஒரு தந்தை என்ற முறையில் அவரது பெண்ணை வேலைக்கு அனுப்புவீர்களா? அல்லது ஒரு நண்பராக, அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு கடத்தல் அபாயம் குறித்து எச்சரிக்கை செய்வீர்களா? என்ற வகையில் இந்த விளையாட்டை விளையாடுபவரிடம் கேள்விகளை எழுப்புவதன் மூலம் இந்தியாவில் குழந்தைக் கடத்தல் குறித்த கடுமையான உண்மைகளை இது வெளிப்படுத்துகிறது.

பெரும்பாலும் கிராமப்புற ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 9,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் 2016ஆம் ஆண்டில் கடத்தப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. அரசின் புள்ளிவிவரங்களின்படி இது அதற்கு முந்தைய ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகும்.

இவர்களில் பெரும்பாலோர் மிகவும் ஏழ்மையான கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். நல்ல வேலை என்ற ஆசை வார்த்தைகளின் மூலம் ஆட்கடத்தலில் ஈடுபடுவோரால் இவர்கள் நகரங்களுக்குக் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். எனினும் பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை அல்லது கடன் அடிமைத்தனத்தில் இருக்க வைக்கப்படுகின்றனர். இவர்களில் ஒரு சிலர் கண்டுபிடிக்கப்படுகின்றனர்; எனினும் பலரும் தொடர்ந்து காணாமல் போனவர்களாகவே இருக்கின்றனர்.

எப்படி சிறுமிகள் ஆட்கடத்தல்காரர்களால் நல்ல வேலைகளை வாங்கித் தருவதாக ஆசை காட்டப்பட்டு நகரங்களுக்குக் கவர்ந்திழுத்து வரப்படுகிறார்கள்; ஆனால் பின்பு அவர்கள் வீட்டு வேலை செய்பவர்களாக, சிறு உற்பத்தி நிலையங்களில் வேலை செய்வதற்காக, வயலில் வேலை செய்வதற்காக அல்லது  பாலியல் தொழில் மையங்களில் பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்குள்ளாக உழலும் வகையில் விற்கப்படுகின்றனர் என்பதை இந்த இணைய வழி விளையாட்டு படிப்படியாக வெளிப்படுத்துகிறது.

குறை கூறப்படுவோம்; அவமானப்படுத்தப்படுவோம்; அல்லது பழிதூற்றப்படுவோம் என்ற பயத்தின் காரணமாக இவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பங்களும் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருந்து விடுவது; இத்தகைய கொடுமைகள் குறித்து புகார் தெரிவிக்காமல் இருந்து விடுவது என்ற வகையில் சமூக ரீதியாக மிகவும் பழமைப்போக்கு நிரம்பிய இந்திய விதிமுறைகளை எதிர்த்து நிற்க இதில் விளையாடுபவர்களின் விருப்பங்கள் உதவக் கூடும் என்பதை இந்த விளையாட்டு முக்கியமாக எடுத்துக் கூறுகிறது.

தற்போது இந்தி, ஆங்கில மொழிகளில் கிடைக்கும் இந்த இணைய வழி விளையாட்டை இதர மொழிகளிலும் வழங்க இதை உருவாக்கியவர்கள் முயற்சித்து வருவதோடு, எதிர்காலத்தில் மேலும் பல கதைச்சித்திரங்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->